தேர்தல்: செய்தி
வாக்காளர் முறைகேடு தொடர்பாக தேர்தல் அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) திங்கட்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வரை எதிர்ப்பு பேரணி நடத்துவார்கள்.
2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கம்
இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளை அதிகாரப்பூர்வ பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
'அபத்தமானது': ராகுல் காந்தியின் வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகளை சாடிய தேர்தல் ஆணையம்
கர்நாடகாவில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கடுமையாக சாடியுள்ளது.
செப்.9 தேர்தல்; துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்
செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்டது.
பிப்ரவரி 2026 இல் பங்களாதேஷில் தேர்தல்; தலைமை ஆலோசகர் முகமது யூனூஸ் அறிவிப்பு
பங்களாதேஷ் அதன் அடுத்த பொதுத் தேர்தலை பிப்ரவரி 2026 இல் நடத்தும் என்று அந்நாட்டு அரசின் இடைக்காலத் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்தார்.
செப்டம்பர் 9 அன்று துணை ஜனாதிபதி தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
17வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
2026 தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் விஜய்தான்; பாஜவுடனான கூட்டணியை நிராகரித்தது தவெக
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெள்ளிக்கிழமை (ஜூலை 4) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக விஜயை அறிவித்தது.
இந்தியாவிற்கே முன்னோடி; முதல்முறையாக மொபைல் ஆப் மூலம் வாக்களிக்கும் வசதி பீகாரில் அறிமுகம்
மொபைல் போன் மூலம் வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய மாநிலமாக பீகார் மாறியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) அறிவித்தார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன?
மதுரையில் நேற்று (ஜூன் 22) நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு; வாக்குச்சாவடி வீடியோ பதிவு காட்சிகளை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் உறுதி
எதிர்க்கட்சிகள் வாக்குச்சாவடி வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 வேட்பாளர்களுக்கும் வெற்றிச் சான்றிதழ் வழங்கினார் தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் இருந்து வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
2029 தேர்தல்களில் 33% பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது
வரவிருக்கும் 2029 பொதுத் தேர்தலுக்காக மக்களவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
₹300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்; மாநிலங்களவை தேர்தலுக்கான பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல்
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தனக்கு சுமார் ₹300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.
பங்களாதேஷில் ஏப்ரல் 2026இல் பொதுத்தேர்தல் நடைபெறும் என தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவிப்பு
பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், ஏப்ரல் 2026 இல் நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த உள்ளதாக அறிவித்தார்.
அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு?
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் தனபால் ஆகியோரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள "தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கப்படுமா?" என்பது முக்கிய அரசியல் கேள்வியாக உள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; கமல்ஹாசனுக்கும் வாய்ப்பு
ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) நான்கு வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அந்த இடங்களை நிரப்ப மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு
எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இருக்கும் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தை சந்தேகிக்கும் வகையிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உள்கட்டமைப்பு வலிமையை எடுத்துக்காட்டும் வகையிலும், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பேசிய சமீபத்திய கருத்துக்கள் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூரின் ஆளும் கட்சி புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் அமோக வெற்றி பெற்றது
சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று, புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கீழ் அதன் அரசியல் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை; பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
மதுரையில் பொதுக்குழு கூட்டம்; திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சனிக்கிழமை (மே 3) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக நடத்தியது.
கனடா தேர்தல்: மார்க் கார்னியின் லிபெரல் கட்சியினர் முன்னிலை
கனடாவின் 2025 தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கனடா தேர்தலில் லிபரல்களுக்கும் கன்சர்வேடிவ்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
அமித் ஷாவின் தமிழக வருகை: பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் உருவாகுமா?
பாஜக மற்றும் அதிமுக இடையிலான உறவுகள் மீண்டும் வலுப்பெறுமா என்ற அரசியல் சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தருகிறார்.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகுகிறாரா? அடுத்த தலைவர் யார்?
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து பேச்சுக்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகக்கூடும் என செய்திகள் கூறுகின்றன.
தேர்தலில் வாக்களிக்க குடியுரிமைச் சான்றிதழ் கட்டாயம்: அதிபர் டிரம்ப் உத்தரவு
இனி அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க குடியுரிமை சான்றிதழை கட்டாயமாகியுள்ளார் டிரம்ப்.
மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு
மியான்மரின் ராணுவ அரசாங்கம் அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை, 2026ல் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டி: பிரசாந்த் கிஷோர்
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் தனித்தே போட்டியிடும் என அரசியல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர்.
புதிய ஜெர்மன் அதிபராக தேர்வானார் பிரீட்ரிக் மெர்ஸ்; யார் அவர்?
ஜெர்மனியின் பொதுத் தேர்தலில் ஓலாஃப் ஸ்கோல்ஸின் மைய-இடது சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) தோற்கடித்து, அவரது கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், அதிகளவு வாக்குகளைப் பெற்றதை அடுத்து, ஜெர்மனியின் பழமைவாதத் தலைவர் பிரீட்ரிக் மெர்ஸ் நாட்டை வழிநடத்த உள்ளார்.
இந்திய தேர்தலில் சட்டவிரோத குடியேறிகளின் தலையீடு குறித்து துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கவலை
சமீபத்தில் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் சட்டவிரோத குடியேறிகள் தலையிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
'வேறு யாரையோ தேர்ந்தெடுக்க முயற்சி':இந்தியத் தேர்தல்களில் USAID தலையீடு இருப்பதாக டிரம்ப் தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முன்னோடியான ஜோ பைடனின் முன்னாள் நிர்வாகம் இந்தியாவில் தேர்தல் தலையீட்டில் ஈடுபட்டதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு; யார் அந்த ஞானேஷ் குமார்?
மே 2022 முதல் இந்தியாவின் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வரும் ராஜீவ் குமார் பதவி ஓய்வு பெறவுள்ள நிலையில், ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் வாக்குப்பதிவுக்கான 21 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா ரத்து செய்தது; வெளிநாட்டு தலையீடு என பாஜக குற்றச்சாட்டு
எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE), இந்தியாவில் வாக்காளர்களின் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் வகையில், ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட $21 மில்லியன் வரி செலுத்துவோர் நிதியுதவி மானியத்தை ரத்து செய்துள்ளது.
புதிய தேர்தல் ஆணையத் தலைவரைத் தேர்ந்தெடுக்க மோடி, ராகுல் அடுத்த வாரம் சந்திக்கின்றனர்
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமாரின் வாரிசை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு அடுத்த வார தொடக்கத்தில் கூடும் என்று PTI தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு இன்னும் பாஜகவுக்கு எட்டா கனியா? MOTN கருத்துக் கணிப்பு கூறுவது என்ன?
இந்தியா டுடே-சி-வோட்டர் மனநிலை கருத்துக் கணிப்புப்படி, இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் தமிழகம் பாஜகவிற்கு எட்டா கனியாகவே இருக்கிறது என தெரியவந்துள்ளது.
அதிரடியாக வியூகம் அமைக்கும் TVK விஜய்; அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் சென்னையில் திடீர் சந்திப்பு
சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லிக்கு பெண் முதல்வர் தேர்வு செய்யப்படலாம்: உள் விவரங்கள் இதோ
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, தேசிய தலைநகரில் ஒரு பெண் முதல்வர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெல்லியில் ஆட்சி; பாஜகவின் ஆகச் சிறந்த கம்பேக்
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களைக் கடந்து வரலாற்று மறுபிரவேசம் செய்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை; 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வசமாகிறது இந்தியாவின் தலைநகர்?
டெல்லி சட்டமன்றத் தேர்தல்களின் ஆரம்பகாலப் போக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) வலுவான முன்னிலையைக் காட்டுகின்றன, இது தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
டெல்லி சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா ஆம் ஆத்மி கட்சி?
டெல்லி சட்டசபை தேர்தல் 2025க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 7:00 மணிக்கு தொடங்கியது. மாலை 6:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு முதல் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
டெல்லி தேர்தல் 2025: 70 சட்டமன்ற இடங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.